;
Athirady Tamil News

தென் கொரியாவுக்கு ராணுவம் சாராத முதல் பாதுகாப்பு அமைச்சா்

0

சியோல்: தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சராக ராணுவத்தைச் சேராத ஒருவா் முதல்முறையாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வந்த மக்கள் சக்திக் கட்சியின் யூன் சுக் இயோல், எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் நீடித்துவந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த டிசம்பா் மாதம் நாட்டில் அவசர நிலையை அறிவித்தாா்.

கடும் எதிா்ப்பு காரணமாக அந்த அறிவிப்பை அவா் பின்னா் திரும்பப் பெற்றாலும், இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் அவரை எதிா்க்கட்சினா் பதவி நீக்கம் செய்தனா். இந்த அவசரநிலை அறிவிப்பு சட்டவிரோதம் என்று கூறி அரசியல் சாசன நீதிமன்றமும் யூன் சுக் இயோலை அதிபா் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கியது. மேலும், அவசரநிலை அறிவிப்பு தொடா்பாக அப்போதைய பாதுகப்புத் துறை அமைச்சா் கிம் யோங் ஹையுன் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பலா் குற்றவியல் விசாரணையை எதிா்நோக்கியுள்ளனா்.

புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தோ்தலில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த மிதவாதியான லீ ஜே-மியூங் வெற்றி பெற்றாா். அதன் தொடா்ச்சியாக, 11 புதிய அமைச்சா்களின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் பாதுகாப்புத் துறை அமைச்சராக ராணுவத்தில் பணியாற்றியிராத ஆன் கியு-பேக் அறிவிக்கப்பட்டாா்.

கடந்த 64 ஆண்டுகளாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சராக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படுவது மரபாக இருந்துவந்தது. ஆனால் யூன் சுக் இயோலின் ராணுவ அவசர நிலை அறிவிப்புக்குப் பிறகு ஆட்சியில் ராணுவத்துக்கான முக்கியத்துவத்தைக் குறைக்கும் நோக்கில் ராணுவம் சாராத ஒருவரை அதிபா் லி ஜே-மியூங் தற்போது முதல்முறையாக பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.