;
Athirady Tamil News

இரு பொலிஸ் அதிகாரிகளின் நெகிழ்ச்சி செயல் ; தெய்வாதீனமாக உயிர் தப்பிய இருவர்

0

உஸ்ஸன்கொட கடற்கரையில் நீராட சென்ற இருவர், அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று (28) நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்காக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருவரையும் மீட்டு, அவர்களுக்கு அடிப்படை முதலுதவி அளித்த பின்னர், அவர்களின் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் சிக்கிய இருவரும் ஹூங்கம பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 34 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.