;
Athirady Tamil News

யாழில் பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்பு

0

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் இன்று (31) அன்று பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது .

இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினரால் ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை வத்திராயன் பகுதி முழுவதும் மேற்கொள்ள பட்டது.

இச் சுற்றி வளைப்பில் 54 பொதிகள் அடங்கிய 103 kg கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளனர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.