;
Athirady Tamil News

கொழும்பில் தாக்குதலுக்கு தயாரான முன்னாள் இராணுவ வீரர் கைது

0

கொழும்பில் பாதாள உலக தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ கமாண்டோ படையின் ஓய்வுபெற்ற சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற சார்ஜென்ட் நேற்று முன்தினம்(14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் போதைப்பொருடன் மாலபேயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பல இராணுவ கமாண்டோ உடைகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணைகளின் போது, டுபாயிலுள்ள இராணுவ கமாண்டோ படையிலிருந்து தப்பிச் சென்ற ஒரு சிப்பாய் தனக்கு துப்பாக்கி, போதைப்பொருட்கள் போன்றவற்றை அனுப்பியதாக சந்தேகநபர் கூறியுள்ளார்.

மேலும் சம்பவம் டொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.