;
Athirady Tamil News

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மருத்துவர் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்

0

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர், தனியார் பேருந்தொன்றில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்குள்ளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 14 நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை (01) அன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இரத்தினபுரி, மொரகஹாயட்ட, லென் கெட்டிய வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய பி. மதரா மதுபாஷினி என்ற ஒரு குழந்தையின் தாயார் என தெரியவந்துள்ளது.

குறித்த வைத்தியர் கடந்த மாதம் 19 ஆம் திகதி அன்று, தனது வேலையை முடித்துவிட்டு தனியார் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, ​​மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் உள்ள பெல்மடுல்ல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து பேருந்தில் இருந்து விழுந்துள்ளார்.

முச்சக்கர வண்டியொன்று திடீரென வீதியை கடக்க முயன்ற போது பேருந்து ஓட்டுநர் பிரேக் போட்ட நிலையில் போது வைத்தியர் பேருந்தின் கதவு அருகில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.