எல்ல பேருந்து விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் முக்கியஸ்தர்
எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தங்காலைக்கு விஜயம் செய்திருந்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் நேற்றைய தினம் அவர்களின் சொந்த இடமான தங்காலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.