;
Athirady Tamil News

சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

0

சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 25 வாகனங்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது இது தொடர்பான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் விசாரணைகளின் போது பெறப்பட்ட சரிபார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக பதிவு செய்தல் மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனங்களை ஒன்று சேர்த்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோன்ற வாகனங்களை வைத்திருப்பதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நபர்கள் அரசியலுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.