கார் – முச்சக்கரவண்டி மோதி விபத்து
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் மற்றும் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
விபத்தில் கார், முச்சக்கரவண்டி பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் கயமடைந்த சாரதிகள் பாலமுனை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.