;
Athirady Tamil News

பதின்ம வயது சிறுவர்கள் இருவர் மாயம்; கலக்கத்தில் குடும்பத்தினர்

0

பதின்ம வயது சிறுவர்கள் இருவர் காணாமல்போயுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். கண்டி , தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்போன சிறுவர்களில் ஒருவரது தாயார் இது தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

கலக்கத்தில் குடும்பத்தினர்
சிறுவர்கள் இருவரும் நேற்று (08) வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சிறுவர்கள் இருவரும் மகாவலி கங்கைக்கு செல்வதை கண்டதாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாயமான சிறுவர்களை தேடி மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.