;
Athirady Tamil News

சீனாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ; சிக்கித் தவித்த கார்கள்

0

சீனாவின் மிகப்பெரிய சுங்கச்சாவடியான வுசுவாங்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சுங்கச்சாவடியில், 8 நாட்கள் விடுமுறையை முடித்துக்கொண்டு, அக்டோபர் 6 ஆம் திகதி மில்லியன் கணக்கான பயணிகள் வீடு திரும்பியதால், அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வுசுவாங் சுங்கச்சாவடியில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தற்பொது அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

36 பாதைகளைக் கொண்ட வுசுவாங் சுங்கச்சாவடி, சுங்கச்சாவடிகளைக் கடக்க முயற்சிக்கும் போது, ​​ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான கார்கள் வரிசையில் நிற்பதை அந்த வீடியோக்கள் காட்டுகின்றன.

இந்த ஆண்டு விடுமுறையின் போது சுமார் 888 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த ஆண்டு ஏழு நாள் விடுமுறையின் போது 765 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்நாட்டு கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இதேபோன்ற பெரிய போக்குவரத்து நெரிசல்கள் இதற்கு முன்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.