;
Athirady Tamil News

கொழும்பு சென்ற யாழ் பெண் விபத்தில் உயிரிழப்பு ; திருமணமாகி ஒருவருடத்தில் நேர்ந்த துயரம்

0

யாழ்ப்பாணம் ஏழாலையை சேர்ந்த திருமணமான இளம் பெண் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்றபோது இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுராதபுரதிற்கு அண்மையில் அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.

விபத்தில் யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியைச் சேர்ந்த 25 என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவத்தில் மேலும் ஒரு வயோதிபப் பெண்ணும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.