;
Athirady Tamil News

ட்ரம்பின் அணுசக்தி நெருக்கடியால் வரலாற்றில் முதல் முறையாக 1400 பேர்! மோசமான விளைவுகள் என எச்சரிக்கை

0

அமெரிக்காவில் வரலாற்றில் முதல் முறையாக தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் 1,400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

1,400 ஊழியர்கள் பணிநீக்கம்
அமெரிக்காவில் முதல் முறையாக நிதி பற்றாக்குறையால் NNSA பாதிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி துறை செய்தித் தொடர்பாளர் பென் டீடெரிச் கூறியுள்ளார்.

இதன் விளைவாக வரலாற்றில் முதல் முறையாக 1,400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது மற்றும் அரசாங்கப் பணிநிறுத்தம் அதன் 20வது நாளில் நீடிப்பதால் 400க்கும் குறைவானவர்கள் மட்டுமே நீடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

எரிசக்தித் துறை செயலாளர் கிறிஸ் ரைட், இந்த அசாதாரண நடவடிக்கையை உறுதிப்படுத்தினார். அவர், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ‘நமது அணு ஆயுதக் கிடங்கை நவீனமயமாக்குவதற்கு மிகவும் முக்கியமானவர்கள்’ என்று விவரித்தார்.

தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய கட்டாயப்படுத்துவதால் ‘மோசமான விளைவுகள்’ ஏற்படும் என்று அமெரிக்காவின் அணு ஆயுதக் கிடங்கை மேற்பார்வையிடும் நிறுவனம் எச்சரித்துள்ளது ட்ரம்ப் அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.