நல்லூா் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்
நல்லூர் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட இராமலிங்கம் சிவகரன் இன்றைய தினம் (21.10.2025) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் முன்னர் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றி நாளையதினம் (22.10.2025) நல்லூர் பிரதேச செயலகத்தில் தனது கடமையினை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

