குஞ்சுக்குளத்தில் நிர்க்கதியான 3 பேரை பத்திரமாக மீட்ட விமானப்படை!
மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இன்று (30) மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ஹெலிக்கொப்டர் புறப்பட்டுச் சென்றது.
இதன்போது வெள்ளப்பெருக்கில் வீட்டினுள் சிக்கிய 3நபர்களை விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
அவர்கள் அங்கிருந்து வவுனியா விமானப்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு நோயாளர் காவு வண்டியினூடாக வவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

