;
Athirady Tamil News

போலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

0

தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்களை அவதானித்து பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர், பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதுபற்றிய முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் போலி நாணய புழக்கத்தை தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.