;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1817775.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

கனடா உள்ளிட்ட 14 நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அதிருப்தி

0

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 19 புதிய குடியேற்றங்களை (settlements) அனுமதித்த இஸ்ரேலின் முடிவை, பிரித்தானியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட 14 நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.

இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும், காசாவில் நிலவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும், பிராந்தியத்தின் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் அவை எச்சரித்துள்ளன.

பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், மால்டா, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், “மேற்கு கரையில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை 19 புதிய குடியேற்றங்களை அனுமதித்ததை நாங்கள் கண்டிக்கிறோம்” என தெரிவித்துள்ளன.

மேலும், எந்தவிதமான இணைப்பையும் (annexation) மற்றும் குடியேற்ற விரிவாக்கத்தையும் தாங்கள் எதிர்ப்பதாகக் கூறிய நாடுகள், இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெற இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன.

இரு-நாடுகள் தீர்வு அடிப்படையில் முழுமையான, நியாயமான மற்றும் நிலையான அமைதிக்கான தங்களின் உறுதிப்பாட்டையும் அவை மீண்டும் உறுதிப்படுத்தின.

இதற்கு பதிலளித்த இஸ்ரேல், இந்த விமர்சனங்களை பாகுபாடு எனக் கூறியுள்ளது. “யூதர்கள் இஸ்ரேல் நிலத்தில் வாழும் உரிமையை வெளிநாட்டு அரசுகள் கட்டுப்படுத்த முடியாது; இப்படிப்பட்ட அழைப்புகள் நெறியியல் ரீதியாக தவறானதும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடுமாகும்” என வெளிநாட்டுத் துறை அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்தார்.

இதற்கிடையில், இஸ்ரேலின் கடுமையான வலதுசாரி நிதியமைச்சர் பெஸலேல் ஸ்மோட்ரிச், இந்த குடியேற்றத் திட்டம் எதிர்கால பாலஸ்தீன நாடு உருவாவதைத் தடுக்கவே என வெளிப்படையாக கூறியுள்ளார்.

2022 இறுதியில் அரசு பொறுப்பேற்றதிலிருந்து 69 புதிய குடியேற்றங்கள் கட்டட அனுமதி பெற்றதாக அல்லது பின்னோக்கி சட்டபூர்வமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் குடியேற்ற விரிவாக்கம் 2017க்கு பிந்தைய மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாகவும், இது இஸ்ரேலிய–பாலஸ்தீன அமைதி ஒப்பந்தத்திற்கு முக்கிய தடையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இந்த சட்டவிரோத கட்டுமானங்கள் பாலஸ்தீனர்களுக்கான தொடர்ச்சியான நிலப்பரப்பை சுருக்கி, சுயாதீன பாலஸ்தீன நாடு உருவாவதை கடுமையாக பாதிப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.