;
Athirady Tamil News

ஈரானிய ஜனாதிபதி மேற்கு நாடுகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

0

ஈரான் தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் முழுமையான போர் நிலைமைக்கு உள்ளாகி உள்ளதாக ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அடுத்த திங்கட்கிழமை நடைபெறவுள்ள சந்திப்புக்கு முன் வெளியாகியுள்ளது.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லாஹ் அலி கமெனேயியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான பேட்டியில், பெசெஷ்கியான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள்
நாங்கள் 1980-1988 இடையிலான ஈராக்–ஈரான் போரை விட இன்னும் கடுமையான மற்றும் சிக்கலான போரை எதிர்கொள்கிறோம்” என் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் போர் இருபுறத்திலும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார்.

நாங்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பாவுடன் முழுமையான போரில் உள்ளோம்; அவர்கள் எமது நாட்டை நிலைத்திருக்க விட விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் 12-நாள் ஆகாயப் போர்ப் தாக்குதல்கள் ஈரானில் 1,100க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதில் மூத்த ராணுவ ஆணையாளர்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் உட்பட அடங்கினர்.

பதிலடி ராக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேலில் 28 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலைமையால், நெடன்யாஹு–டிரம்ப் சந்திப்பில் ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முக்கிய அம்சமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.