;
Athirady Tamil News

தமிழர் பகுதியொன்றை அதிர வைத்த சம்பவம் ; நள்ளிரவில் பொலிஸார் காட்டிய அதிரடி

0

கிளிநொச்சியில் இன்று(01) நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிப் பிரயோகம்
கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக, டிப்பர் வாகனத்தின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

மேலும், டிப்பர் வாகனத்தைச் செலுத்திய சாரதி தப்பி ஓடியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.