;
Athirady Tamil News

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு பெருமளவான நிதி ஒதுக்கீடு

0

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.

இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும்.

அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை
தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை” கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவியில் இம்முறை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.இலங்கைக்கு நிதியுதவியாக 400 கோடி இந்திய ரூபாயை (INR 400 Crore / 4 Billion INR) இந்தியா ஒதுக்கியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 300 கோடி ரூபாயை விட அதிகமாகும்.

இந்த நிதியானது இலங்கையில் முன்னெடுக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள், மனிதாபிமான உதவிகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.