;
Athirady Tamil News

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

0

கொலம்பியா நாட்டின் அதிபர் குஸ்தாவோ பெட்ரோ அமெரிக்காவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அதிரடியாகத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா சிறைப்பிடித்தது. போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா அதிபரின் வழக்கு விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோவின் மீது குற்றம்சாட்டிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளால், அதிபர் பெட்ரோ, அவரது குடும்பத்தினர் மற்றும் கொலம்பியாவின் அரசு அதிகாரிகளின் மீது தடை விதிப்பதாக டிரம்ப்பின் நிர்வாகம் கடந்த 2025 அக்டோபரில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அரசு முறைப் பயணமாக இன்று (பிப். 3) அமெரிக்காவுக்குச் செல்லும் கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதிபர் டிரம்ப் கூறுகையில், வெனிசுவேலா தாக்குதலுக்குப் பிறகு அவர் (அதிபர் குஸ்தாவோ பெட்ரோ) மிகவும் நல்லவராக நடந்து கொள்கிறார்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, இடதுசாரி கொள்கைகளுடைய அதிபர் குஸ்தாவோ காஸா, வெனிசுவேலா விவகாரங்களில், அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் கொலம்பியா அதிபர்கள் இடையிலான சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.