;
Athirady Tamil News

திருமணமாகி ஒருமாதம்; தந்தை கால்நடைகளை விற்றதால் உயிரை மாய்த்த இளைஞன்

0

மொனராகல, புத்தல பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், தனது தந்தை தனது கால்நடைகளை விற்றதால் மனமுடைந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் புஹுல்கொட்டுவ பகுதியை சேர்ந்த 23 வயதான லஹிரு உதயங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மனைவியும் விஷம் குடித்து மருத்துவமனையில்
அவரது தந்தை கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார், மேலும் அவரது மகன் கால்நடைகளை பராமரித்து வருகிறார். நான்கு எருமை மாடுகளை சில வாரங்களுக்கு முன்பு அவரது தந்தை மகனுக்கு தெரிவிக்காமல் விற்பனை செய்துள்ளார்.

இதனால் வருத்தமடைந்த இளைஞன், கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது வீட்டிற்கு அருகிலுள்ள நெல் வயலுக்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கி உயிரை மாய்துள்ளார்.

கணவன் உயிரிழந்த சம்பவம் அறித்த மனைவியும் விஷம் குடித்து மொனராகலை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.