ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல்! – உறுதிசெய்த ஐஏஇஏ
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ‘ஐஏஇஏ’ செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது.
சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) இதுதொடா்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய ஈரானில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தில், அணு உலை அமைந்துள்ள நிலத்தடிப் பகுதிக்குச் செல்லும் நுழைவு வாயில் கட்டடங்கள் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்துள்ளன.
எனினும், இத்தாக்குதலால் அணு உலையின் மிக முக்கியமான உட்பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அணுக்கதிா்வீச்சு கசியும் அபாயம் ஏதும் இல்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, நடான்ஸ் அணுசக்தி மையத் தாக்குதல் குறித்த ஈரான் குற்றச்சாட்டை ஐஏஇஏ மறுத்திருந்தது.