;
Athirady Tamil News

மத்திய கிழக்கு பதற்றம் மத்தியில் துபாயில் ட்ரோன் சம்பவம்

0

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகாமையில் இன்று திடீரென கரும்புகை எழுந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தூதரக வளாகத்திற்கு மிக அருகிலுள்ள பகுதியில் இருந்து புகை உயர்ந்து வந்ததை நேரில் பார்த்த சாட்சியங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஒரு ஆளில்லா விமானம் (ட்ரோன்) அந்தப் பகுதியில் விழுந்ததே தீ விபத்திற்குக் காரணம் என துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் குறுகிய பகுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், எவ்வித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அவசர மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை முன்னிட்டு, சம்பவத்திற்குப் பின்னர் தூதரகப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.