;
Athirady Tamil News

அக்கரைப்பற்று பகுதியில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் போதைப்பொருள் செயற்திட்டம் முன்னெடுப்பு

0

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கமைய வெள்ளிக்கிழமை(6) அக்கரைப்பற்று ஜும்மா பள்ளிவாசலை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி பங்கு பெற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது ‘விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்’- அகன்று செல்’ எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

அத்துடன் அரச அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இதன் போது அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.