2 எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்- இந்தியர் உயிரிழப்பு
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் தாக்கம் கடல்வழி போக்குவரத்தில் அதிகரித்துள்ளது.
ஈரான், ஈராக் கடற்கரைக்கு அருகில் இரண்டு எண்ணெய் கப்பல்களை தாக்கியுள்ளது. இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மால்டா கோடி ஏந்திய Zefyros மற்றும் மார்ஷல் தீவுகள் கோடியை ஏந்திய Safesea Vishnu ஆகியவை தாக்குதலுக்கு உள்ளான இரண்டு கப்பல்களாகும்.
Safesea Vishnu அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமானதாகும்.
ஈரான் தனது Suicide படகுகள் மூலம் இந்த எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 27 பேர் மீட்கப்பட்டு ஈராக்கின் Basra நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியர் ஒருவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த கப்பல்கள் சுமார் 4 லட்சம் பீப்பாய் ஈராக்கிய கச்சா எண்ணையை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் தீ பரவியது.
ஹார்முஸ் நீரிணை வழியாக ஒரு லீற்றர் எண்ணெய் கூட செல்ல அனுமதிக்கமாட்டோம் என ஈரான் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் காரணமாக எண்ணெய் விலை பீப்பாய்க்கு 120 டொலர் வரை உயர்ந்துள்ளது.