மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போக்குவரத்து உப குழுக் கூட்டம்
;
இதன்போது தலைமையுரையாற்றிய கருணநாதன் இளங்குமரன், கடந்த வருடம் 250 மில்லியன் ரூபா மற்றும் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் நிகழ்ச்சித் திட்டங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசுசரிய – பாடசாலை பேரூந்துச் சேவை, கெமி செரிய – கிராமிய இணைப்பு பேரூந்து சேவை, நிசி செரிய – பின்னிரவு பேரூந்து சேவை மற்றும் கடல்வழிப் போக்குவரத்து ஆகியன தொடர்பாக விரிவாக ஆராந்து, அனைவரும் ஒன்றிணைந்து மாவட்டத்தின் அபிவிருத்திக்கு தமது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் வட மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் குரூஸ், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவகுமாரன், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினார்கள்.