யாழில்.கடை மற்றும் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் நால்வர் கைது – திருடப்பட்ட பொருட்களும் மீட்பு
;
யாழ் நகரில் நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் உள்ள கடை ஒன்றில் மூன்று இலட்சத்து ஆறுபதாயிரம் ரூபாய் பெறுமதியான வலைகளை திருடப்பட்டுள்ளது.
அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நான்கு பேரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து களவாடப்பட்ட பொருட்களையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.