;
Athirady Tamil News

பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் புடினின் கூலிப்படை… தாக்குதல் நடத்தவும் தயார்

0

பிரித்தானியாவை தனது முதன்மை எதிரியாகத் தெரிவு செய்துள்ள விளாடிமிர் புடின், தாக்குதலுக்கும் தயாராகி வருவதாக, நாடு கடத்தப்பட்ட ரஷ்ய எண்ணெய் நிறுவனத் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

குறைத்து மதிப்பிடக் கூடாது
2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து, ரஷ்யா ஐரோப்பா முழுவதும் தனது கலப்புப் போர் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளுக்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வந்துள்ளது.

புடினின் முக்கிய விமர்சகரான மிகைல் கோடர்கோவ்ஸ்கி தெரிவிக்கையில், ரஷ்ய ஜனாதிபதியை மேற்கத்திய நாடுகள் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும், அவர் பிரித்தானியா மீது எவரும் எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்த 100 சதவீதம் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

புடினுடனான மோதல்களைத் தொடர்ந்து சைபீரியச் சிறையில் 10 ஆண்டுகள் கழித்த, நாடு கடத்தப்பட்ட ரஷ்யத் தொழிலதிபர் கோடர்கோவ்ஸ்கி, ரஷ்யாவிற்கு வெளியே புடினுக்கு எதிராக இயங்கும் எதிர்க்கட்சி வட்டாரங்களில், ஒரு முன்னணி நபராக உருவெடுத்துள்ளார்.

புடின் உண்மையில் ஒரு ரவுடி என குறிப்பிட்டுள்ள கோடர்கோவ்ஸ்கி, அவர் மற்றவர்களின் பலவீனத்தை அவர்களைத் தாக்குவதற்கான முதன்மை உத்தியாகக் கருதுகிறார் என்றார்.

புடினைப் பொறுத்த மட்டில், இன்று ஐரோப்பா ஒரு பலவீனமான எதிரி எனவும் கோடர்கோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, பிரித்தானியாவை தனது முதன்மை எதிரியாகத் தெரிவு செய்துள்ள புடின், ரஷ்யாவை ஆதரிக்காத எவரையும் அவர் எதிரியாகவே அடையாளப்படுத்துகிறார் என்றார்.

இரகசியச் செயல்பாடுகள்
சொல்லப்போனால், பிரித்தானியாவுக்கு எதிராக ஒரு முறையான தாக்குதலை நடத்துவதற்கு புடினிடம் சரியான படைபலம் இல்லை. உண்மையில், இன்று மேற்கத்திய நாடுகளைத் தாக்குவதற்கு அவரிடம் போதுமான இராணுவ பலம் எஞ்சியிருக்கவில்லை.

மட்டுமின்றி, ஐரோப்பிய இராணுவம் பலமிழந்து காணபப்டுவதும் புடினுக்குத் தெரியும் என்றார். பிரித்தானியா மீதான தாக்குதலுக்காக புடினிடம் உள்ள மூன்று வழிமுறைகளை கோடொர்கோவ்ஸ்கி பட்டியலிட்டுள்ளார்.

மேலும், பிரித்தானியாவின் எல்லைகளுக்குள் ரஷ்யாவின் இரகசியச் செயல்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் அவர் எச்சரித்தார். ரஷ்ய உளவுத்துறையின் செயற்பாடுகள் பிரித்தானியாவுக்குள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளதாக தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இயங்கும் ரஷ்யாவின் உளவுத்துறை முகவர்களை பிரித்தானியா மீதான தாக்குதலுக்கு புடின் பயன்படுத்தலாம். ரஷ்யாவிடம் இருந்து மேலும் பல மறைமுகத் தாக்குதலுக்கு பிரித்தானியா தயாராக வேண்டும் என்றும் கோடர்கோவ்ஸ்கி எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.