அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் விசேட ஆராய்வு
அம்பாறை மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான அனுபம மங்கள விக்கிரமாரச்சி ஏற்பாட்டில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ அவர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று, மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். அப்துல் வாசித், அபூபக்கர் ஆதம்பாவா, சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
மேலும், மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பல்வேறு அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் இக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
