;
Athirady Tamil News

கம்பஹாவில் ரயில் தடம்புரள்வு

0

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (23) மாலை ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

பிற்பகல் 4.25 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த ரயிலேயே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான மார்க்கத்தின் அனைத்து ரயில் சேவைகளும் ஒரு வழிதடத்தில் மாத்திரம் பயணிப்பதால், பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.