;
Athirady Tamil News

ஊடகவியலாளர் பகுதிக்குள் தனது ஆதரவாளரை இருத்திய யாழ்.மாநகர சபை உறுப்பினர் – கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஊடகவியலாளர்கள்

0

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தனது ஆதரவாளர் ஒருவரை ஊடகவியலாளர் பகுதிக்குள் இருத்தி அவரூடாக தனது சபை அமர்வை காணொளி எடுத்து தனது முகநூலில் பதிவு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தனது ஆதரவாளர் ஒருவரை ஊடகவியலாளர் பகுதிக்குள் ஊடகவியலாளர் என கூறி அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த நபர் மாநகர சபை அமர்வில் காணொளிகளை பதிவு செய்ததுடன் அதற்கான சிறியரக ஒலி வாங்கியை குறித்த மாநகர சபை உறுப்பினரின் ஒத்துழைப்புடன் கூட்ட மண்டபத்திற்குள்ளும் வைத்துள்ளார்.

மாநகர சபை அமர்வு காணொளிகள் உடனுக்குடன் குறித்த மாநகர சபை உறுப்பினரின் முகநூல் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்களை மாநகர சபை அமர்வுக்கு அனுமதிக்கும் போது எந்த ஊடகம், ஊடக அடையாள அட்டையை பரிசீலிக்கும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் எந்த அடிப்படையில் கட்சி சார்ந்த நபரை ஊடகம் என்ற போர்வையில் அனுமதித்துள்ளனர் என்ற கேள்வி ஊடகவியலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறித்த மாநகர சபை உறுப்பினரே கடந்த காலத்தில் மாநகர சபை அமர்வின் போது முகநூலில் நேரலை போட்டு சர்ச்சைக்குள்ளாகியிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.