;
Athirady Tamil News

கணவனுடன் வாக்குவாதம்; இளம் பெண் எடுத்த முடிவால் துயரம்

0

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழுகாமம் பகுதியில் நேற்று முன் தினம் 22 வயது இளம் குடும்ப பெண் உயிரிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யுவதி 4 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளை தமிழர் பகுதிகளின் அண்மைகாலமாக் இளையோர் உயிரிழப்புக்கள் அதிகமாக பதிவாகி வருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.