ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
அந்நிலையில், பருத்தித்துறை நகர் பகுதியில் அமைந்திருந்த உடைக்கப்பட்ட தியாக தீபத்தின் நினைவு தூபியில் சுடரேற்றி, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.