;
Athirady Tamil News
Daily Archives

6 March 2024

ரஷ்யாவின் இரண்டு முக்கிய தளபதிகளுக்கு பிடியாணை

உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ரஷ்ய உயர்மட்ட தளபதிகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) பிடியாணை பிறப்பித்துள்ளது. இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் செர்ஜி கோபிலாஷ் மற்றும் கடற்படை அட்மிரல் விக்டர் சோகோலோவ்…

இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் மற்றும் ஊழியர்கள் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இஸ்ரோ ஊழியர்கள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட வெற்றிக்கரமான பயணங்கள் அடங்கும். விண்வெளி ஆராய்ச்சி…

அமெரிக்காவில் தொழிற்சாலை குப்பை கிடங்கில் பரவிய தீ

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் டெட்ராய்டு நகரில் ஒரு தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வேகமாக பரவியது. இதன் காரணமாக தொழிற்சாலையின் குப்பை கிடங்கில் தீப்பற்றி ஆங்காங்கே வெடித்து…

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : மற்றுமொரு கப்பலை தகர்த்தது உக்ரைன்

உக்ரைன் கடல்படையின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷ்யாவின் புதிய ரோந்து கப்பலை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல் நிறுத்தப்பட்டு உக்ரைனுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த…

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய இடமாற்றம் – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தடைப்பட்டுள்ள வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தை விரைந்து செயற்படுத்துமாறு இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று (05.03.2024) வடக்கு மாகாண கல்வி அமைச்சின்…

பிரான்சில் இந்த சலுகை இனி கிடையாது: அறிமுகமாகியுள்ள புதிய சட்டம்

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்னும் ஒரு சலுகை உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு சலுகையாகும். ஆனால், பிரான்சில் இனிமேல் அந்த சலுகை கிடையாது என அரசு தெரிவித்துள்ளது. பிரான்சில் இந்த சலுகை இனி கிடையாது பிரான்ஸ்…

மாலைதீவுடனான போர் பயிற்சி! இலங்கையில் இருந்து திரும்பி சென்ற இந்திய கப்பல்கள்

மாலைதீவு மற்றும் இலங்கை கடற்படையுடன் போர் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு இந்திய போர்க்கப்பல்கள் கொழும்பில் இருந்து நாடு திரும்பியுள்ளன. மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட முத்தரப்பு போர்ப் பயிற்சி முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு…

புதுச்சேரி சிறுமி இறப்பு: கடலில் இறங்கிப் போராடிய மக்கள்!

புதுச்சேரி சோலைநகர் சிறுமி கொலை விவகாரத்தில், நீதி வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்திசிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பெண் குழந்தைக்கு பாதுகாப்பு…

என்னை விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் கோட்டாபய

சிறிலங்காவின் அதிபராக நான் தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து, என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் செயற்பட்டதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் உள்ளடக்கி…

பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்கள் திரட்டிய வழக்கு.. தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ…

லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்கள் திரட்டிய வழக்கு தொடர்பாக தமிழ்நாடு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் கைதிகளை…

சாவகச்சேரி – நுணாவிலில் மண் கடத்தல்: தப்பியோடிய டிப்பர் சாரதி

நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தை சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸார் மறித்ததையடுத்து வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ளார். குறித்த சம்பவமானது, இன்று (06.03.2024) புதன்கிழமை அதிகாலை 2.00…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு

சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (06.3.2024) உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.…

இந்தோனேசியாவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம்

உலகில் மக்கள் தொகையில் 7வது பெரிய நாடாக திகழும் இந்தோனேசியாவில் 86% மேல் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். அதிக இஸ்லாமிய மக்கள் தொகையை கொண்ட நாடு என்ற பெருமையும் இந்தோனேசியாவுக்கு உள்ளது. 17,000க்கும் அதிகமாக தீவுகளை உள்ளடக்கிய…

இளவரசி கேட் மீண்டும் பணிக்குத் திரும்புவது எப்போது? முதன்முறையாக வெளியான அறிவிப்பு

பிரித்தானிய இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்ட விடயம், பிரித்தானியாவில் அளவுக்கு மீறி கவனம் ஈர்த்துவிட்டது எனலாம். பரவத் துவங்கிய வதந்திகள் ஜனவரி மாதம், இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் ஓய்வுக்காக வீடு…

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் பதவி தற்காலிகமாக இடைநீக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன் நாடாளுமன்ற உறுப்புரிமை தற்காலிமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விழுமியங்கள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான துறைசார் குழுவின் ஆலோசனைக்கு அமைய இந்த…

திடீரென மயங்கி வீழ்ந்து பறிபோன மாணவியின் உயிர்

இரத்தினபுரி - கலவான பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் இன்று (06.03.2024) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இரத்தினபுரி - கலவான பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை…

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்று (05.03.2024) காலை 4.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அறிவியல் ஆய்வு மையம் நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆக…

ரொறன்ரோவில் ரயிலில் மோதுண்டு இரண்டு பேர் பலி

கனடாவின் ரொறன்ரோவில் ரயிலில் மோதுண்டு இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அப் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதுண்ட ஓரு ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நகரின் மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு பத்து…

இணைய தளமொன்றின் செய்தி ஆசிரியரை அதிரடியாக கைது செய்த சி.ஐ.டி!

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள குற்றச்சாட்டில் சிங்கள இணைய தளமொன்றின் செய்தி ஆசிரியரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சிங்கள இணைய தளத்தின் செய்தி ஆசிரியர் ஜீ.பி. நிஸ்ஸங்க என்பவரே இவ்வாறு கைது…

திருக்கோணேஸ்வர ஆலய கட்டாணையை நீடித்தது நீதிமன்றம்

திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது கட்டாணையை மேலும் 14 நாட்களுக்கு நீடித்து உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபைக்கு எதிராக தொடரப்பட்ட…

வழக்கு விசாரணைக்கு வந்த ஐவர் மீது அசிட் தாக்குதல்

வழக்கு விசாரணைக்காக வந்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சில் ஐவர் காயமடைந்துள்ளனர். இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (06.03.2024) காலை இடம்பெற்ற அசிட் வீச்சினால் ஐவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா…

தில்லி நோக்கிப் பேரணி: விவசாயிகளின் போராட்டத்தால் காவல்துறை குவிப்பு

குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வலியுறுத்தி, தில்லிக்கு பேரணியாகச் செல்லும் விவசாயிகளின் போராட்டம் காரணமாக பஞ்சாப் - ஹரியானா எல்லையில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மஸ்தூர் மோர்ச்சா மற்றும்…

திடீரென மயங்கி விழுந்த இரு பெண்கள் உயிரிழப்பு

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவி உட்பட இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று(06) இடம்பெற்றுள்ளது. அதன்படி கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியொருவர் இன்று(06) மயங்கி விழுந்து…

நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் அனுமதிக்க கூகுள் ஒப்புதல்: மத்திய அரசு

‘நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் பிளே ஸ்டோரில் அனுமதிக்க கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது; இதற்காக நிறுவனங்கள் தொடா் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டிய விவகாரத்துக்கு உரிய தீா்வு எட்டப்படும்’ என்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும்…

சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளிடம் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தி

சுயமான தீர்மானத்துக்கு அமைய பணியாளர்களின் சம்பளத்தை அதிகரித்தமை தொடர்பில் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளிடம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா…

உலகின் பணக்காரர் பட்டியலில் முதலாவது இடத்தை இழந்த எலான் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை எலான் மஸ்க்கிடம் இருந்து, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தட்டிப் பறித்துள்ளார். டெஸ்லா நிறுவனரும், ட்விட்டர் (எக்ஸ்) நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்க் 9 மாதங்களுக்கு மேலாக உலகின் முதல்…

முச்சக்கர வண்டி திருட்டு : உதவி கோரும் பொலிஸார்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாஹத்த பகுதியில் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (04.03.2024) பதிவாகியுள்ளது. இந்த…

சமுர்த்தி திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (06.03.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக்…

யாழில் பொலிஸார் மீது தாக்குதல் – இருவர் கைது

பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற மூவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி சென்ற நபர்களே பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ்…

சுவிஸ் யாழிசனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள்…

சுவிஸ் யாழிசனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ) ################################# யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில்…

இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட…

வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட துறையிலும் சாதித்த மாணவர்களுக்கு வானத்தில் சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவை வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் இன்று முதல் ஏற்பாடு…

விமான படையின் சாகசம்

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமான கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில்…

கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரிப்பு

கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அநேகமான மளிகைப் பொருள் பெரு நிறுவனங்கள் விலைக் கழிவுகளை வழங்கும் வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. பொருளாதார நெருக்கடி…

நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ: மோடி தொடக்கிவைத்தார்!

கொல்கத்தாவின் ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையே நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடக்கிவைத்தார். மேற்கு வங்கத்தில் ரூ. 15,000 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி…