;
Athirady Tamil News

வழக்கு விசாரணைக்கு வந்த ஐவர் மீது அசிட் தாக்குதல்

0

வழக்கு விசாரணைக்காக வந்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (06.03.2024) காலை இடம்பெற்ற அசிட் வீச்சினால் ஐவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

வழக்கு ஒன்றுக்காக வந்த ஒருவர், வீதியில் பயணித்த அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரியின் புதிய நகரத்தில் கடந்த (23.04.2023) ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பிரதான பிரதிவாதியை இலக்கு வைத்தே அசிட் வீச்சு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக வந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கார் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் தந்தையே அசிட் வீச்சை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.