;
Athirady Tamil News
Daily Archives

21 April 2025

கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயம்

பொலன்னறுவை - கதுருவெல நவநகர வீதியில் இன்று (21) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இந்த…

மின்னல் தாக்கி தாய் பலி ; நிர்க்கதியான நான்கு பிள்ளைகள்

மின்னல் தாக்கி நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் (வயது 38) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், மொனராகலை குடா ஓயா பொலிஸ் பிரிவின் மகாயாய பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. ​​குறித்த தாய் வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் மழை பெய்யும்…

இளம்பெண் குப்பையில் போடச் சொன்ன பையால் பொலிசில் சிக்கிய இளைஞர்

பக்கத்து வீட்டுப் பெண், பை ஒன்றை குப்பையில் போடச் சொல்ல, அதன்படி குப்பையில் அந்தப் பையை வீசிய நபரைத் தேடி பொலிசார் வந்த சம்பவம் ஒன்று பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது. இளைஞரைத் தேடி வந்த பொலிசார் பெங்களூருவில் தன் வீட்டு வாசலில் பொலிசார்…

தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை மீறி உக்ரைனில் ரஷியா தாக்குதல்!

கீவ்: உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்பும் ரஷியா தாக்குதல்களை நிகழ்த்தியதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். 3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு தற்காலிக தீர்வாக,…

தயவு செய்து தேர்ச்சி பெற வையுங்கள் – ரூ.500 உடன் 10ஆம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை

நாடு முழுவதும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தது. இதற்கான விடைத்தாளை திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாளுடன் ரூ.500 மாணவர்கள் சிலர் விடைத்தாளுடன், ரூ.500 வைத்து…

யாழில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்….!

யாழில் (Jaffna) வீடொன்றுக்குள் இருந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் பருத்தித்துறை - தும்பளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினர்…

யாழில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியில் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடுத்துறை…

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்பு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டது. இருப்பினும், பல நடைமுறை சிக்கல்கள்…

யாழ் கோவிலில் பெண் வேடமிட்டு திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இன்று (20) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண்…

அமெரிக்கா: விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலி!

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானமான செஸ்னா சி180ஜி விமானம், மின்கம்பிகள் மீது மோதியதில் வெடித்து சிதறியதாகக்…

ஈஸ்டரையொட்டி மக்களை சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

ஈஸ்டர் திருநாளையொட்டி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று (ஏப். 20) மக்களை நேரடியாகச் சந்தித்தார். வாடிகன் சதுக்கத்தில் கூடிய மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் செய்தியைப்…