;
Athirady Tamil News
Yearly Archives

2025

யாழில்.போதைப்பொருள் வாங்க சித்தியின் நகையை திருடிய குற்றத்தில் இளைஞன் கைது

போதைப்பொருளை வாங்க சித்தியின் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞனையும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் 03 இளைஞர்களையும் பொலிஸார் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். திருநெல்வேலி பகுதியில் உள்ள…

கிரீஸ் தொடா் நிலநடுக்கம்: அவசரநிலை அறிவிப்பு

கிரீஸுக்குச் சொந்தமான சன்டோரினி தீவில் நூற்றுக்கணக்கான கடலடி நிலநடுக்கங்கள் தொடா்ந்து ஏற்பட்டுவருவதைத் தொடா்ந்து, அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவு நிலநடுக்கத்தால் தொடா்ந்து குலுங்கி…

தீவிரமடையும் உப்பு தட்டுப்பாடு: மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உப்பு தட்டுப்பாடு இதன் காரணமாக நாட்டின் உப்பு…

வவுனியாவில் பாடசாலை மாணவன் மீது இளைஞர்கள் கோர தாக்குதல்!

வவுனியா(Vavuniya) நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.…

பாடசாலை மாணவர்களால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சிரமம்

அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றமையினால் குறித்த மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாடசாலை விளையாட்டு…

பொருளாதார அடித்தளத்திலிருந்திற்காக ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். மிகவும் வலுவான நிலையிலிருந்து சந்தையைக் கைப்பற்றும் சவாலை நாம் எதிர்கொள்ளாததால், வேறொரு தரப்பிலிருந்து…

பக்கவாத நோய் குணமாக தாயை மண்ணெண்ணெய் குடிக்க வைத்த மகன்.., கடைசியில் ஏற்பட்ட விபரீதம்

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு, மகன் மண்ணெண்ணெய் குடிக்க வைத்ததால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் உயிரிழப்பு இந்திய மாநிலமான மத்தியபிரதேசம் போபால் அருகிலுள்ள கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் மங்களா…

அமெரிக்காவில் 10 பேருடன் சென்ற விமானம் மாயம்

அமெரிக்காவில் 10 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் அலாஸ்கா கடற்கரையில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து நோம் நகருக்கு 10 பேருடன் செஸ்னா 208பி என்கிற சிறிய ரக விமானம்…

சர்வதேச நாணய நாணய நிதியம் இலங்கைக்கு விதித்துள்ள நிபந்தனை

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சில முக்கிய விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜுலி கோசெக் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். வரவு…

ரஷ்ய இராணுவத்திலுள்ள தமிழ் இளைஞர்களின் நிலை தொடர்பில் சிறீதரன் கோரிக்கை

ரஸ்ய இராணுவத்தில் இணைந்துள்ள தமிழ் இளைஞர்களது நிலை தொடர்பில் கண்டறிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரியுள்ளார். ரஸ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை…

ஜனாதிபதி அநுர தலைமையில் Govt Pay ஆரம்பம்

நாட்டை டிஜிட்டல் சமூகத்துக்குத் திருப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) அனுர குமார திசாநாயக்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கமைந்து, GovPay எனும் அரச கொடுப்பனவு தளத்தை…

யாழிலிருந்து முல்லைத்தீவு சென்ற பேருந்து சாரதி மீது மர்ம நபர்கள் வாள்வெட்டு

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த பேருந்தின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர். பொலிஸார் விசாரணை குறித்த சம்பவம் நேற்று (7) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

அல்பர்ட்டா மாகாணத்தில் இலத்திரனியல் வாகனங்களுக்கு வரி அறவீடு

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் இலத்திரனியல் வாகனங்களுக்கு வரி அறவீடு செய்யப்பட உள்ளது. சுமார் 200 டாலர்கள் வரியாக அளவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை முதல் இந்த வரி அறவீட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக…

காதலால் பாகிஸ்தானில் சிக்கிய அமெரிக்கப் பெண்! $100,000 பணம் கேட்டு அரசிடம் கோரிக்கை

அமெரிக்க பெண் ஒருவரின் பாகிஸ்தான் பயணம் எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது. காதலனை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த அமெரிக்க பெண் இரண்டு குழந்தைகளுக்கு தாயான 33 வயதான ஒனிஜா ஆண்ட்ரூ ராபின்சன், நியூயார்க்கில் இருந்து கராச்சிக்கு 19 வயதான…

உக்ரைன் போர் தொடர்பில் டொனால்டு ட்ரம்பின் ரகசிய திட்டம் கசிந்தது

உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டொனால்டு ட்ரம்பின் திட்டம் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. நிபந்தனைகளில் ஒன்றாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நேரடி சந்திப்பு ஒன்றை முன்னெடுக்க ஜனாதிபதி ட்ரம்ப் தயாராகி வருவதாக…

ஹமாஸ் அமைப்புக்குள் எழுந்த முரண்பாடுகள்: ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை!

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஓரினச்சேர்க்கையாளர்களை தூக்கிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஹமாஸின் கொடூர தாக்குதலும் இஸ்ரேலின் பதிலடியும் கடந்த 2023 ஆம் ஆண்டில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து ஒரு பயங்கர தாக்குதலை நடத்தினர்.…

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் – இலங்கையில் பெண்கள் ஜனநாயக மறுமலர்ச்சியை…

நியுயோர்க் டைம்ஸ் தமிழில் - ரஜீபன் பாராளுமன்றத்தின் சாதாரண அமர்வின் போது வெளியான சுருக்கமான கருத்துதான் அது. ஆனால் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பலம்வாய்ந்த தலைவர்களாலும் அவர்களின் ஞனரஞ்சக அரசியலாலும் சில காலத்திற்கு முன்னர்…

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் நீதிமன்றத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் நீதிமன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின்…

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி…

400 வருடங்கள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள் உருவாக்கும்…

வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள் உருவாக்கம் செய்யும் பணி இன்று(7) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட…

விசாவுக்கு 42 லட்சம்! பல சடலங்களை கண்டோம்..அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட இந்தியர்கள்…

அமெரிக்கவில் சட்டவிரோதமாக குடியேறியதால், ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் அதிர்ச்சி தகவல்களையும், வேதனையையும் பகிர்ந்துள்ளனர். வெளியேற்ற அதிரடி உத்தரவு டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்பேற்றதைத்…

தமிழர் பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி பலி

முல்லைத்தீவு புளியங்குளம், பழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி ஒருவர் இன்று (07) மரணமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா வடக்கு, புளியங்குளம், பழையவாடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 6 வயது சிறுமி கொய்யா…

இளவரசர் ஹரிக்கு துவங்கியது சிக்கல்: ரகசிய ஆவணங்களை வெளியிட நீதிபதி முடிவு

பிரித்தானிய இளவரசர் ஹரி எப்படி அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி பெற்றார், அவர் தனது விசா தொடர்பான விடயங்களில் பொய் சொன்னாரா என்பது தொடர்பான ஆவணங்கள் பலவற்றை வெளியிட விரும்புவதாக, அந்த வழக்கைக் கையாளும் நீதிபதி தெரிவித்துள்ளார். இளவரசர்…

தெஹியோவிட்ட பகுதியில் சற்றுமுன் தீ விபத்து – ஒருவர் பலி!

தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகஸ்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (7) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் தெஹியோவிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்துக்கு…

ரஷ்ய பெரும் முதலாளிகளை குறிவைக்க உருவாக்கப்பட்ட பணிக்குழு ட்ரம்ப் நிர்வாகத்தால் கலைப்பு

ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமான பெரும் முதலாளிகளை குறிவைக்கும் வகையில், உக்ரைன் போரை அடுத்து உருவாக்கப்பட்ட பணிக்குழுவை ட்ரம்ப் நிர்வாகம் கலைத்துள்ளது. பணிக்குழு கலைக்கப்படுவதாக உக்ரைன் போரையடுத்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு…

மழை, சகதி… பனாமா காட்டில் ஒளிந்து கொண்ட இந்தியர்கள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட நிலையில், பலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். சொத்துக்களையும் விற்று அவர்களில் பலர் நீண்ட சட்டவிரோத…

மகா கும்பமேளாவில் 3-வது முறையாக தீ விபத்து!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார் 18-ல் ஏற்பட்ட தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில்…

13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டதோடு, ஏனைய நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். 17 இந்திய மீனவர்களும் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை…

மட்டு நகரில் அரச நியமனங்கள் கோரி வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் ஆர்பாட்டம் இடம்பெற்றது. அரச…

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி; அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமைச்சர்

உக்ரைன் ரஷ்ய போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்…

இலங்கையில் GovPay’ வசதி அறிமுகம்

இலங்கையில் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்ச்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (7) நடைபெற்றது. வினைத்திறனானதும் பாதுகாப்பானதுமான டிஜிட்டல்…

கோவையில் அரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்!

கடும் பனி மூட்டம் காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல் விமானம் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது. கோவையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் விமான சேவையில் அங்கு பாதிப்பு ஏற்பட்டது.…

பிரான்ஸில் ஆரம்பமான செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு

2025 செயற்கை நுண்ணறிவு (AI) செயல் உச்சி மாநாட்டை முன்னிட்டு நிகழ்வுகள் இந்த வாரம் பாரிஸில் தொடங்குகின்றன. எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒரு முக்கிய சந்திப்பாகக்…

யாசகரை பலி எடுத்த பேருந்து

கொழும்பு கோட்டை - யோர்க் வீதியில் இடம்பெற்ற விபத்தில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த யாசகர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…