;
Athirady Tamil News

லைவ் அப்டேட்ஸ்: நேட்டோவில் இணைவது குறித்து இன்று அறிவிக்கும் ஃபின்லாந்து…!!

0

06.45: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து, ஃபின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் இணைவது குறித்து ஆலோசித்து வந்தன. இந்நிலையில் இன்று ஃபின்லாந்து நேட்டோவில் இணைவது குறித்து அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து ஸ்வீடனும் கூடிய விரைவில் இணைவது குறித்து அறிவிக்க உள்ளது.

நேட்டோ படைகள் ஓர் ஆண்டுக்கு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நார்வே, டென்மார்க், பால்டிக் நாடுகள் நேட்டோவில் இடம்பெற்றுள்ள நிலையில், ஸ்வீடன், ஃபின்லாந்து இணைப்பு நார்டிக் பகுதியை வலுப்படுத்தும் என அந்நாடுகள் கருதுகின்றன.

06.45: உக்ரைனில் நீண்ட போருக்கு ரஷிய அதிபர் புதின் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமாகி வரும் நிலையில், அந்தப் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்ற ரஷியா முயற்சிக்கிறது, கிழக்கில் வெற்றி பெற்றாலும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர முடியாது என அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ் எச்சரித்துள்ளார்.

03.45: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதின் பற்றி போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவீக்கி தி டெலகிராப் பத்திரிகையில் கட்டுரை எழுதி உள்ளார்.

புதின் ஹிட்லரும் அல்ல, ஸ்டாலினும் அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிகவும் ஆபத்தானவர். உக்ரைனில் புச்சா, இர்பின், மரியுபோல் நகரங்களின் தெருக்கள் அப்பாவி மக்களின் ரத்தத்தால் ஓடின. இது ஸ்டாலின், ஹிட்லரின் சபிக்கப்பட்ட சித்தாந்தங்கள் திரும்புவதைக் குறிக்கிறது என கூறியுள்ளார்.

00.45: போரினால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் ராணுவம் பல்வேறு இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவை அந்நாட்டு ராணுவம் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

ஏற்கனவே, மரியுபோல் நகரத்தை உக்ரைன் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.