;
Athirady Tamil News

அரிசிக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு !!

0

வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் 210 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.