;
Athirady Tamil News

சூரிய குடும்பத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுகோள்கள்..!!

0

இன்யறைய நவீன அறிவியல் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இதுமட்டுமல்ல அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் நம் பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன? விண்ணில் இருந்து அவை எப்படி நகர்கின்றன என்பதை வரையறுத்து சொல்லும் அளவுக்கு அறிவியல் வளர்ந்து விட்டது. பல அதிநவீன தொலைநோக்கிகள் நட்சத்திரங்களை பட்டியலிடும் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஐரோப்பிய விண்வெளி முகமை கடந்த 2013-ம் ஆண்டு ஆய்வுக்காக நவீன தொலைநோக்கியை விண்வெளியில் செலுத்தியது. இந்த தொலைநோக்கி விண்கலத்தின் நோக்கமே நம்முடைய பேரண்டத்தை அதிலும் குறிப்பாக நமது பால்வழி மண்டலத்தை ஆராய்வதுதான். கண்டுபிடிப்பு எந்திரம் என்று வர்ணிக்கப்படும் இந்த தொலைநோக்கி தினமும் விண்வெளிபற்றிய புதிது புதிதாக நாம் அறிந்திராத ஏராளமான தகவல்களை கண்டுபிடித்து தருகிறது. பூமியில் இருந்து 10 லட்சம் மைல் தொலைவில் நிலைகொண்டுள்ள இந்த விண்வெளி தொலைநோக்கி அதில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமிரா மூலம் வானில் ஒளிர்கிற, நகர்கிற எல்லா பொருட்களையும் துல்லியமாக பதிவு செய்கிறது. இந்த தொலைநோக்கி மூலம் கிடைத்த பல்வேறு கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் காணப்படும் கண் போன்ற பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் இருந்திருக்கலாம் என்று நம்புவதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் சில கருப்புநிற புள்ளிகள் உள்ளன. அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. மண் தங்கி ஏற்பட்ட படிமங்களாக இருக்கலாம் அல்லது வேறு சில வேதி பொருட்களின் அச்சாக இருக்கலாம் என ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இதுவரை சுமார் 2 மில்லியன் நட்சத்திரங்களை ஆய்வு செய்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நமது சூரிய குடும்பத்தில் உள்ள 1,56,000-க்கும் மேற்பட்ட சிறு கோள்களில் பட்டியல் போன்ற வீட்டுக்கு அருகில் உள்ளது. அதன் சுற்றுப்பாதைகளை கருவி ஒப்பிட முடியாத துல்லியத்துடன் கணக்கிட்டுள்ளதாக கயா ஆய்வு மைய உறுப்பினர் பிரான்கோயிஸ் மிக்னார்டு கூறினார். கயா பால்விதிக்கு அப்பால் 2.9 மில்லியன் விண்மீன் திறன்கள் மற்றும் 1.9 மில்லியன் குவாசர்களை கண்டறிந்துள்ளது. கயா தொலைநோக்கி உற்பத்தி செய்யும் தரவுகள் விண்வெளி இயற்பியலில் ஒரு சுனாமியை போல என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முழு ஆய்வு முடிவுகளும் 2030-ம் ஆண்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.