;
Athirady Tamil News

மண் கடத்திய 2 டிரைவர்கள் கைது..!!

0

தொப்பூர் அருகே கீழ்பூரிக்கல் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் மண் கடத்துவதாக நல்லம்பள்ளி தாசில்தார் பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் விரைந்து சென்றனர். அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் அள்ளி கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து தொப்பூர் போலீசுக்கு வருவாய்த்துறையினர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மலையூர்காடு பகுதியை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் பூபதி (வயது39), கீழ்பூரிக்கல் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் அசோக் (37) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.