;
Athirady Tamil News

கொரோனா பாதிப்பில் இருந்து மு.க.ஸ்டாலின் குணமடைய சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

0

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டி கேரளாவில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். கேரள மாநிலம் ஏற்றமானூரில் பழமையான சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்தால் நோய் குணமாகும் என்பது ஐதீகம். அதன்படி கேரள மாநில தி.மு.க. நிர்வாகி கோபகுமார் தலைமையில் நேற்று தி.மு.க.வினர் ஏராளமானோர் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்தும், மிருத்துஞ்சய ஹோமம் நடத்தியும் வழிபாடுகள் நடத்தினர். இந்த வழிபாடுகள் மூலம் மு.க.ஸ்டாலின் விரைவில் நோயில் இருந்து குணமடைவார் என கேரள மாநில தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.