;
Athirady Tamil News

பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளுக்கு கொரோனாவால் குறைவான பாதிப்பு மத்திய அரசு தகவல்..!!

0

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:- பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவத்தினருக்கு கொரோனாவால் தீவிரம் குறைவான நோய் பாதிப்பே ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 26-ந் தேதி நிலவரப்படி, 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 9 கோடியே 96 லட்சம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 7 கோடியே 79 லட்சம் பேர் 2 ேடாஸ் தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டுள்ளனர். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போட அனுமதி வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.