;
Athirady Tamil News

லொட்டரியால் நித்திரை இன்றி தவிக்கும் கனடியர் – ஒரே நாளில் கோடிக்கணக்கான பணம் !!

0

கனடாவில் ஒன்றாறியோ மாகாணத்தின் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து லட்சம் டொலர் பரிசு வென்றுள்ளார்.

46 வயதான பிரைன் வோகன் என்பவரே லொட்டோ மேக்ஸ் என்னும் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பண பரிசினை வென்றெடுத்துள்ளார்.

எனினும் பரிசுத்தொகை வென்றெடுக்கப்பட்டது அறிந்தது முதல் ஒரு வார காலமாக தாம் நித்திரையின்றி தவிப்பதாக தெரிவிக்கின்றார்.

மகிழ்ச்சி காரணமாக தன்னால் உறங்க முடியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

கடந்த 20 ஆண்டுகளாக தம் புத்தர் சீட்டு விளையாட்டில் அவ்வப்போது ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.

கலந்து ஜூலை மாதம் இடம்பெற்ற சீட்டிலுப்பில் குறித்த நபர் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

ஆரம்பத்தில் 500 டொலர் பரிசு வென்றதாகவே கருதியதாகவும் பின்னர் சரியாக பார்த்தபோது மேலும் அதிக அளவு பூச்சியங்கள் வெற்றி பரிசுத் தொகையில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.