;
Athirady Tamil News

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம்- உளவுத்துறை எச்சரிக்கையால் பரபரப்பு!!

0

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னர் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளா தார மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசும்போது, “கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி நடந்தது போன்ற பொது அமைதியின்மையை உருவாக்க சில குழுக்கள் முயற்சித்ததாக உளவுத்துறை அறிக்கைகள் அளித்துள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறும்போது, “தற்போது நிலவும் வறட்சியால் பயிர் செய்வதற்கு நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் பிரச்சி னைகளை ஏற்படுத்தினர். விவசாய அமைச்சர் வீட்டை சுற்றி வளைக்க முயற்சிகள் செய்யப்பட்டன. வறட்சியால் ஏற்படும் தண்ணீர் நெருக்கடியை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளில் சிலர் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வன்முறையை தூண்ட சில குழுக்கள் திட்டமிட்டனர்” என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.