;
Athirady Tamil News

அபிவிருத்தி அடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் இளம் சந்ததியினரே முன்னோடிகள் : ரணில் விக்ரமசிங்க

0

இலங்கையில் சவாலான சகாப்தத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் செழிப்பான நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்கும் பயணத்தில் தற்போதைய இளம் சந்ததியினரே முன்னோடிகளாக திகழ்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை சமூகமயமாக்குதல்
இதேவேனை புதிய தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களைக் கொண்டு சவால்களை சமாளிக்கும் சமச்சீர் ஆளுமை கொண்ட திறமையான குடிமக்களாக சிறுவர்களை சமூகமயமாக்கும் வகையில் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் தாம் போற்றி வந்த பெறுமதிமிக்க நற்பண்புகளை உலகுக்கு பிரதிபலிக்கும் வகையில் உலக முதியோர் தினம் கொண்டாடப்படுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.