;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் வெடித்து சிதறிய விமானம்: இந்தியர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு!

0

ஜிம்பாப்வே நாட்டில் நடுவானில் விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிம்பாப்வே – முரோவா நகரில் உள்ள வைர சுரங்கத்தின் உரிமையாளராக இந்தியர் ஹர்பால் ரந்தாவா இருந்து வருகிறார்.

இவர் தனது மகன் மற்றும் நண்பர்களுடன் முரோவாவுக்கு செல்வதற்காக தனியார் விமானத்தில் புறப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், தலைநகர் ஹராரேவில் இருந்து கிளம்பிய இந்த விமானம் முரோவா அருகே சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென விமானம் நடுவானிலேயே வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது விமானத்தில் இருந்த 6 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.