;
Athirady Tamil News

பாலுடன் சென்ற பௌசர் வீதியை விட்டு விபத்து..!

0

பால் ஏற்றி சென்ற பௌசர் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா – வட்டவளை லொனோக் தோட்ட பகுதியிலுள்ள பால் சேகரிக்கும் நிலையத்திலிருந்து பாலினை பதப்படுத்துவதற்கு மீரிகம பகுதிக்கு சென்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளனது.

பௌசர் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த விபத்தின் போது சாரதிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.