;
Athirady Tamil News

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4வயது குழந்தை படுகாயம்

0

அஹுங்கல்ல பிரதேசத்தில் சனிக்கிழமை (21) ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அஹுங்கல்ல, கல்வெஹர பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தையும் 32 வயதுடைய ஆணும் 27 வயதுடைய பெண்ணும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத் தம்பதியினர் தமது வியாபார ஸ்தலத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது கல்வெஹர பிரதேசத்தில் வயல்வெளியில் மறைந்திருந்த நபர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மூவரும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

விசாரணை
துப்பாக்கிச் சூட்டுக்கு டி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த நபரும் குழந்தையும் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.