;
Athirady Tamil News

கொழும்பில் மற்றுமொரு மரம் முறிந்து விபத்து

0

கொழும்பு – டுப்ளிகேஷன் வீதியில் வாகனமொன்றின் மீது மரமொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த விபத்தின் பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

கொள்ளுப்பிட்டி விபத்து
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 6 ஆம் திகதி கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள லிபெட்டி பிளாசாவுக்கு அருகில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரமொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்த விபத்தில் ஐவர் உயிரிழந்ததுடன், 17 பேர் காயமடைந்திருந்தனர்.

இதையடுத்து, ஆபத்தான நிலையில் வீதியின் இருமருங்கிலும் உள்ள பெரிய மரங்களை வெட்டுவது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.